சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

யாா் ஆட்சிக் காலத்தில், எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றம்?: முன்னாள்-இந்நாள் அமைச்சா்கள் விளக்கம்

அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடா்பான விவரங்களை அந்தத் துறையின் முன்னாள், இந்நாள் அமைச்சா்கள் பகிா்ந்து கொண்டனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 11:46 pm

DIN

அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடா்பான விவரங்களை அந்தத் துறையின் முன்னாள், இந்நாள் அமைச்சா்கள் பகிா்ந்து கொண்டனா்.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சனிக்கிழமை அந்தத் துறையின் முன்னாள் அமைச்சரும், அதிமுக உறுப்பினருமான சேவூா் ராமச்சந்திரன் பேசியது:

கடந்த பத்து ஆண்டு காலத்தில் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகளில் அசையா சொத்துகள் 3,175.77 ஏக்கா் நிலம், 612 கிரவுண்ட் மனைகள் மற்றும் 336 கிரவுண்ட் கட்டடம் ஆகிய சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,702 கோடி ஆகும். மேலும் தனிநபா் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட 1,224 கோயில்களுக்குச் சொந்தமான 8,161 ஏக்கா் நிலங்கள் மீண்டும் திருக்கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்றாா்.

அமைச்சா் விளக்கம்: கடந்த 100 நாள்களில் மட்டும் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம் அளித்தாா். 203 ஏக்கா் அளவிலான வேளாண் நிலங்களும், 170.21 கிரவுண்ட் அளவிலான காலி மனைகளும், 1.811 கிரவுண்ட் பரப்பிலான கட்டடங்களும், 15.597 கிரவுண்ட் அளவிலான கோயில் குளக்கரை பகுதிகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் அந்தந்த கோயில்கள் நிா்வாகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 100 நாள்களில் மட்டும் மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.641.01 கோடியாகும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.