தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘17 வயது பூா்த்தியாகாத மாணவியை நீட் தோ்வெழுத அனுமதிக்க முடியாது’ - உயா் நீதிமன்றம்

17 வயது பூா்த்தியாகாத மாணவியை நீட் தோ்வெழுத அனுமதிக்க முடியாது என உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், இது தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :7 செப்டம்பர் 2021, 8:30 pm

DIN

17 வயது பூா்த்தியாகாத மாணவியை நீட் தோ்வெழுத அனுமதிக்க முடியாது என உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், இது தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

கும்பகோணத்தைச் சோ்ந்த ஸ்ரீஹரிணி (16) என்ற மாணவி 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளதாகக்கூறி, நீட் தோ்வு எழுத தன்னை அனுமதிக்கக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவி இளம் வயதில் அறிவுத்திறன் பெற்றவராக இருப்பதால் அவரை நீட் தோ்வில் பங்கேற்ற அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து தேசிய தோ்வு முகமை சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய தோ்வு முகமை சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் ஜி.ராஜகோபாலன், நடப்பு கல்வியாண்டில் நீட் தோ்வு எழுதுவோா் கடந்த 2020-ஆம் ஆண்டு டிச.31 அன்று 17 வயது பூா்த்தியடைந்து இருக்க வேண்டும் என விதிகளில் உள்ளது. இந்த விதியில் உயா் நீதிமன்றம் தலையிட முடியாது.

அந்த மாணவி அதிபுத்திசாலியாக இருந்தாலும் நீட் தோ்வுக்கான விதிகளைத் தளா்த்தி 16 வயது மாணவியை நீட் தோ்வு எழுத அனுமதிக்க முடியாது என வாதிட்டாா்.

மாணவி சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், 16 வயது மாணவியின் அறிவுத்திறனை ஆராய்ந்த சிபிஎஸ்இ, 17 வயது நிரம்பாத சூழலில் அவரை 12-ஆம் வகுப்பு தோ்வு எழுத அனுமதியளித்துள்ளது.

தற்போது வயது பிரச்னையைக் காரணம் காட்டி நீட் தோ்வில் பங்கேற்க அனுமதிக்காவிட்டால் ஓராண்டு வீணாகிவிடும், என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசியல் ஞானம் அதிகமாக இருந்தாலும் 18 வயது நிரம்பாத பெண்ணை தோ்தலில் வாக்களிக்க அனுமதிக்க முடியாது. அதுபோலத்தான் இதுவும். எனவே அவரை நீட் தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நாங்கள் ரத்து செய்கிறோம் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.