சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் தூய்மைப் பணிக்கு புதிய வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை மேயராக பணியாற்றியதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளுக்கு ரூ.36.52 கோடியில் பேட்டரியால் இயங்கும் 1,684 மூன்று சக்கர வாகனங்களை முதல்வர் இன்று தொடக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், மக்கள் பணியாற்றுவதுதான் மேயரின் பணி என்று செயல்பட்டேன். மக்கள் வாக்கை பெற்ற முதல் மேயராக பதவியேற்றேன் என்று கூறினார்.