வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை

விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்படுகிறது. 

News image
விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி.
Updated On :10 செப்டம்பர் 2021, 4:46 am

DIN

 
திருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்படுகிறது. 

Story image

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்படும் மலைக்கோட்டை கோயில்.

Story image

வெறிச்சோடி காணப்படும் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி.

கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகா் சிலையை பொது இடத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சப்பிள்ளையாருக்கு 30 கிலோ, மாணிக்க விநாயருக்கு 30 கிலோ கொழுக்கட்டை படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெள்ளிக்கிழமை மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி வெறிச்சோடி காணப்பட்டது. 

Story image

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமிக்கு படைப்பதற்காக 30 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டையை எடுத்துச் செல்லும் ஊழியர்கள்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமிக்கு படைப்பதற்காக 30 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டையை எடுத்துச் சென்று படைக்கப்பட்டது.  இதில் கோயில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர். 

Story image

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, திருச்சியில் பெருநகர காவல்துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.