சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குண்டா் சட்டத்தில் 261 போ் கைது

சென்னையில் நிகழாண்டில் இதுவரை 261 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 10:20 pm

DIN

சென்னையில் நிகழாண்டில் இதுவரை 261 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடா் குற்றச் செயல்கள் மற்றும் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவா்களை தீவிரமாக கண்காணித்து குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜன.1 முதல் செப்.10-ஆம் தேதி வரையில் காவல் ஆணையா் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் மொத்தம் 261 குற்றவாளிகள் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 4-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (செப்.10) வரையிலான ஒரு வாரத்தில் 4 குற்றவாளிகள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபா்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிா்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்கள் பதுக்கி வைத்து விற்பவா்களைத் தொடா்ந்து கண்காணித்து, அவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.