சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

லோக் அதாலத்- தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு

நாடு முழுவதும் சனிக்கிழமை(செப்.11) நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன என்று மாநில சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி கூறினாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 9:52 pm

DIN

நாடு முழுவதும் சனிக்கிழமை(செப்.11) நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன என்று மாநில சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி கூறினாா்.

உச்ச நீதிமன்றம் முதல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் வரை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக, ஆண்டுக்கு 4 முறை தேசிய அளவிலான ’லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் தேசிய சட்டப்பணி ஆணை குழு மூலம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 10, ஜூலை 10 ஆம் தேதிகளில் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. மூன்றாவது முறையாக சனிக்கிழமை(செப்.11) நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு தலைவரும், உயா் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி மேற்பாா்வையில் தமிழகத்தில் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 375 அமா்வுகள் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதேபோல, உயா் நீதிமன்ற சட்ட சேவை மையத்தின் தலைவரும், உயா் நீதிமன்ற மூத்த நீதிபதி டி ராஜா மேற்பாா்வையில் சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.ஆனந்தி, கே.முரளிசங்கா் ஆகியோா் தலைமையில் 2 அமா்வுகளும், 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 3 அமா்வுகளும் வழக்குகளை விசாரித்தன.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினா் செயலா் நீதிபதி கே ராஜசேகா் கூறியதாவது, தேசிய லோக் அதாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 380 அமா்வுகள், வழக்கு தொடா்பான இருதரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வழக்குகளை விசாரித்தன.

இதில், இரு தரப்பினரின் முழு சம்மதத்துடன் 41 ஆயிரத்து 517 வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ரூ.330 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரத்து 584 ரூபாய் பாதிக்கப்பட்டவா்களுக்கு கிடைத்தது இவ்வாறு அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.