நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஜிப்மர் மருத்துவமனை சூரிய சக்தி மின்சார தயாரிப்பு நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி (சோலார்) மின்சார தயாரிப்பு நிலையத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

News image

ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி (சோலார்) மின்சார தயாரிப்பு நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

Updated On :12 செப்டம்பர் 2021, 10:08 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி (சோலார்) மின்சார தயாரிப்பு நிலையத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

Story image

மூன்று நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 7 கோடியே 67 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டம் (சோலாா் பேனல்) தொடக்க விழாவில் பங்கேற்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

Story image

ஜிப்மா் வளாகத்தில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என். ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் ஆர். செல்வம், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அதிகாரிகள், ஜிப்மர் இயக்குநர் ராஜேஷ் அகர்வால், மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா மேற்பாா்வையில் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.