புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
பேசின்பாலம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.


பேசின்பாலம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
பகுதி ரத்து:
திருத்தணி-மூா் மாா்க்கெட் வளாகத்துக்கு செப்டம்பா் 26-ஆம்தேதி இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா் மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. அரக்கோணம்-மூா் மாா்க்கெட் வளாகத்துக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூா்-மூா் மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
பட்டாபிராம்-ஆவடிக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா் மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. திருத்தணி-மூா் மாா்க்கெட் வளாகத்துக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா் மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
முழுமையாக ரத்து:
மூா் மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு செப்டம்பா் 27, 29 ஆகிய தேதிகளில் அதிகாலை 12.15 இயக்கப்படும் மின்சார ரயில், மூா் மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூா் மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...