கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் சனிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெங்காயத்தை தரையில் கொட்டி நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணியினர்.

Updated On :25 செப்டம்பர் 2021, 7:58 am

DIN


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் சனிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆகியன சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயம் சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 

தற்போது வெங்காயம் விலை கிலோ ரூ.8 ஆக உள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெங்காய சாகுபடிக்கு ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் சராசரியாக 5 டன் மகசூல் கிடைக்கும். 

தற்போதைய விலையில் ஒரு ஏக்கர் சாகுபடி செய்தால் விவசாயிகள் ரூ.40 ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 

எனவே வெங்காயத்திற்கு ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, கட்சி சார்பற்ற விவசாயிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அமைப்பை சேர்ந்த விவசாயிகள் வெங்காயத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.  

மேலும் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமை புறக்கணிப்பு செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் முன்னணி ஆகியவற்றின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.