மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மே 2-ல் தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும்: மு.க. ஸ்டாலின்

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
மே 2-ல் தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும்: மு.க. ஸ்டாலின்
Updated On :6 ஏப்ரல் 2021, 2:59 am

DIN

சென்னை: நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன் எஸ்ஐஇடி கல்லூரிக்கு வந்து, பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். தமிழகம் முழுவதும் அமைதியாகவும்,  முறையில் தமிழக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருவதாக செய்திகள் மூலம் அறிகிறேன்.

இதற்கான முடிவு மே 2-ஆம் தேதி வெளியாகும் போது சிறப்பாக இருக்கும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தியாகவும் இல்லை, அதிருப்தியாகவும் இல்லை என்று பதிலளித்தார்.

மேலும், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக கோரிக்கை வைத்தது குறித்த கேள்விக்கு, ஆளுங்கட்சியின் தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த வலியுறுத்தியது. ஆனால் அதனை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.