ஸ்டாலின், கமல், ரஜினி வாக்களித்தனர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்டாலின் வாக்களித்தார்.
ஸ்டாலின் வாக்களித்தார்.


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோடை வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க பொதுமக்கள் பலரும் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகிறார்கள். எனவே காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

சென்னையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். 

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன் இன்று காலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்தினார்.

பிறகு, எஸ்ஐஇடி கல்லூரிக்கு வந்து, பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராவுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே, காலை 7 மணிக்கே, நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com