சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. அதிர்ச்சித் தகவல்: தடுப்பூசி போட்ட மருத்துவர்களுக்கு மீண்டும் கரோனா
கரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள துரைமுருகன், ஏற்கனவே கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் துரைமுருகன். ஏற்கனவே, திமுக வேட்பாளர்களுக்கு வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி. கனிமொழிக்கு, தேர்தலுக்கு முன்பாகவே கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒரு சில அரசியல் தலைவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


