சென்னை, நெல்லையில்தான் கரோனா உறுதியாகும் விகிதம் அதிகம்

தமிழகத்திலேயே சென்னை மற்றும் நெல்லையில்தான் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் விகிதம் அதிகமாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, நெல்லையில்தான் கரோனா உறுதியாகும் விகிதம் அதிகம்
சென்னை, நெல்லையில்தான் கரோனா உறுதியாகும் விகிதம் அதிகம்


சென்னை: தமிழகத்திலேயே சென்னை மற்றும் நெல்லையில்தான் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் விகிதம் அதிகமாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மிக அதிகமாக கரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களில் கரோனா உறுதியாவோர் விகிதம் சென்னையில் 20 சதவீதமாகவும், அதற்கடுத்த இடத்தில் நெல்லையில் 17 சதவீதமாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தின் தலைநகர் சென்னையில், 100 பேர் கரோனா பரிசோதனை செய்து கொண்டால், அவர்களில் 20 பேருக்கு கரோனா உறுதியாகிறது. இது போல, நெல்லையில் 17 பேருக்கு கரோனா உறுதியாகிறது. தூத்துக்குடியில் 16 பேருக்கும், தென்காசியில் 14.2 பேருக்கும் கரோனா உறுதியாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 40 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது நாட்டில் முதல் முறையாக கரோனா கண்டறியப்பட்ட 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு சென்னையில் பதிவாகும் மிக அதிக பலி எண்ணிக்கையாகும்.

இதுபோல, தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com