சென்னையில் குறையும் கரோனா: கோவை மீண்டும் முதலிடம்
சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது.


சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சென்னையில் கரோனா பாதிப்பு 216-ஆக இருந்தது. கடந்த மாதம் 27-ம் தேதி 139-ஆக இருந்த நிலையில், தற்போது 205-ஆக பதிவாகியுள்ளது.
சென்னையில் புதிதாக 235 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.
பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 2,080 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இதுவரை மொத்தமாக 5,41,402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.8 சதவிகிதமாக உள்ளது.
சென்னையை விட கோவையில் 217 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஈரோடு 170 பேருக்கும், தஞ்சாவூரில் 127 பேருக்கும், சேலத்தில் 123 பேருக்கும், செங்கல்பட்டில் 112 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...