அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம்
அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம்
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

நான்காவது கட்டமாக மே மாதம் முதல் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

வயநாட்டில் 6.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 6.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிற நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வரும் 636 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com