நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

’2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிசிஆர் பரிசோதனை தேவையில்லை’

இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்று புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image

2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிசிஆர் பரிசோதனை தேவையில்லை

Updated On :16 ஆகஸ்ட் 2021, 11:33 am

DIN

இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்று புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் மக்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழை அளிக்க வேண்டும் என்று புணே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு விலக்கு அந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை. ஆனால் ஒரு தவணை மட்டுமே போட்டுக்கொண்டவர்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.