இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்று புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் மக்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழை அளிக்க வேண்டும் என்று புணே நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு விலக்கு அந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை. ஆனால் ஒரு தவணை மட்டுமே போட்டுக்கொண்டவர்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.