ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா அதிகம் பரவக் காரணம் என்ன? ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால், தற்போது கரோனா அதிகமாகப் பரவி வருவதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள

News image

கரோனா அதிகம் பரவக் காரணம் என்ன? ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம்

Updated On :16 ஆகஸ்ட் 2021, 9:12 am

DIN


சென்னை: தமிழகத்தில் மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால், தற்போது கரோனா அதிகமாகப் பரவி வருவதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறார்கள். இதன் காரணமாகவே கரோனா அதிகமாகப் பரவி வருகிறது. எனினும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் கரோனா பரவல் குறைவாகவே உள்ளது. மற்ற மாவட்டங்களில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னமும் 6 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி போடவேண்டியுள்ளது என்றும் கூறினார்.

மேலும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்து, மத்திய அரசிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, புதிதாக 1,896 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 225 பேருக்கும், சென்னையில் 216 பேருக்கும், ஈரோட்டில் 179 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 1,842 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 23 போ் பலியாகினா் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.