ஜெயலலிதா பல்கலை. விவகாரம் : அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு மீது குற்றம்சாட்டி அதிமுக பேரவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு(கோப்புப்படம்)
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு(கோப்புப்படம்)

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு மீது குற்றம்சாட்டி அதிமுக பேரவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் சட்டப்பேரவையில் இன்று குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் அதே பெயரில் இருந்திருக்காது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com