தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

இன்னும் 1 அல்லது 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் பலத்தமழை பெய்யும்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் இன்று மாலை பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.

News image

இன்னும் 1 அல்லது 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் பலத்தமழை பெய்யும்

Updated On :27 ஆகஸ்ட் 2021, 12:11 pm

DIN


சென்னை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையின் பெரும்பாலான இடங்களில் இன்று மாலை பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Story image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை எச்சரிக்கை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மாலை 5.10 மணிக்கு வெளியிட்டிருக்கும்  தகவலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.