திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டிசம்பர் 13ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார்.
நேற்று நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவியுடன் திங்கள்கிழமை தூத்துக்குடியிலிருந்து காரில் புறப்பட்டு திருச்செந்தூர் கோயில் விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வந்தார்.
இதையும் படிக்க.. ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதம் பரமபதவாசல் திறந்தது ஏன்?
அங்கு தங்கியிருந்த ஆளுநர் செவ்வாய்கிழமை காலை 6.45 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருச்செந்தூர் கோயில் சார்பில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!
நிகழ்ச்சியின் போது, கோட்டாட்சியர் மு.கோகிலா, இணை ஆணையர் (பொறுப்பு) சி.குமரதுரை, உதவி ஆணையர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருச்செந்தூர் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.