தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது தினசரி பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 1,971 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜூலை 2021, 1:37 pm

DIN


தமிழகத்தில் புதிதாக 1,971 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 28 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். எனினும், 2,558 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,37,373 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24,76,339 பேர் குணமடைந்துவிட்டனர். 33,752 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தனிமையில் உள்ளவர்கள் உள்பட இன்னும் 27,282 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக கோவையில் 209 பேரும், சென்னையில் 147 பேரும், சேலத்தில் 136 பேரும், செங்கல்பட்டில் 116 பேரும், ஈரோட்டில் 122 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும், திருப்பூரில் 112 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.