சென்னை: சென்னையில் இன்று முதல் ஏழு நாள்களுக்கு வானிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் மூன்று நாள்களுக்கு சென்னை நகரில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு, சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், வரும் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சென்னை மாநகரில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை, இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.