கிண்டியில் ரூ.250 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை: அரசு

தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிண்டியில் ரூ.250 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை: அரசு

தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருணாநிதியின் 97-வது  பிறந்தநாளையொட்டி தமிழக அரசு புதிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. 

அதன்படி தென்சென்னை மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.250 கோடி மதிப்பில் 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

சென்னை பெருநகரத்தில் தென்பகுதியிலுள்ள மக்கள் சிகிச்சை பெற, முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெற கிண்டியில் உள்ள  கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் விவரமாக: இங்கே கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com