தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், கதை சொல்லிகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
இணைய வழியில் நடைபெற்ற சங்கத்தின் அமைப்பு மாநாட்டில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இணைய வழி சிறார் குழுக்கள், சிறார் செயற்பாட்டாளர்கள், பார்வையாளர்கள் என 250-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
சிறார் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் உதயசங்கர் சங்கத்தின் தலைவராகவும், சிறார் எழுத்தாளர், செயற்பாட்டாளர் விழியன் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளனர். சங்கத்தின் பொருளாளராக பஞ்சு மிட்டாய் இதழ் இணையதள ஆசிரியர், செயற்பாட்டாளர், எழுத்தாளர் பிரபு இருக்கிறார்.
மாநாட்டுக்குத் தலைமையேற்ற உதயசங்கர், சங்கத்தின் தேவையையும் படைப்பாளிகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் விளக்கினார். பொதுச்செயலாளர் விழியன், குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதோடு, அவர்களை எழுதத் தூண்டும் செயல்களை சங்கம் முன்னெடுப்பது உள்ளிட்டவை பற்றி எடுத்துரைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சா் கீா்த்தனா

திருமோகூா் கோயிலில் இன்று புதிய தோ் வெள்ளோட்டம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

