சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திருமாவளவன் கையெழுத்திட்டார்.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கு விசிக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய நிலையில், விசிக நிர்வாகிகள் தொண்டர்களை சமாதானம் செய்தனர்.
திமுக கூட்டணியில் விசிகவிற்கு அதிக தொகுதிகள் எதிர்பார்த்த நிலையில், 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு திமுக கூட்டணியிலுள்ள மதிமுகவிற்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை: கோயம்பேட்டில் மதுபான விடுதியில் தகராறு - இலங்கைத் தமிழ்ப் பெண் கார் ஏற்றிக் கொலை!
வியக்க வைக்கும் பள்ளி

”பேருந்துக்காக இரவு முழுவதும் காத்திருக்கிறோம்!” சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்! | Madurai

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



