
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,991 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வியாழக்கிழமை (இன்று) கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 88 பேர் உயிரிழந்தனர்.
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 23,630 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 13 பேர் உள்பட புதிதாக 30,608 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
கரோனா முழு விவரங்கள்: இங்கே கிளிக் செய்யவும்