
எடப்பாடி கே. பழனிசாமி (கோப்புப்படம்)
பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பை வழங்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கியதைப்போல் இம்முறையும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.