மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 111.68 அடியிலிருந்து 112.28 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 10,858 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 10,904 கன அடியாக அதிகரித்தது.
இதையும் படிக்க | ‘5 ஆண்டுகளாக இல்லாத அளவு மழை கடந்த 2 மாதங்களில் பொழிவு’
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 81.69 டி.எம்.சி. ஆக உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.