திண்டுக்கல்லில் மதுரை மேலூரைச் சேர்ந்த சமயைல் மாஸ்டர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்தவர் அர்ஜுனன் (38). இவர் திருப்பூரில் சமையல் மாஸ்டராக இருந்து வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்த அர்ஜுனனை, மதுரையைச் சேர்ந்த பிரான்சிஸ் அன்பரசன் (20) என்பவர், கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதனை பார்த்து பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தப்பி ஓட முயன்ற பிரான்சிஸ் அன்பரசனை, மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அர்ஜுனன் சடலத்தை கைப்பற்றிய திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார், பிரான்சிஸ், அன்பரசனிடம் கொலை குறித்தி விசாரணை வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.