கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உத்தமபாளையம் அருகே வயதான தம்பதி கழுத்தறுத்து கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வியாழக்கிழமை வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வயதான தம்பதி இறந்து கிடந்தனர்.

News image

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வியாழக்கிழமை கழுத்து அறுக்கப்பட்டு  இறந்த  தம்பதி.

Updated On :12 நவம்பர் 2021, 6:50 am



உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வியாழக்கிழமை வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வயதான தம்பதி இறந்து கிடந்தனர். பணம் , நகையை திருடவந்தவர்கள் முதியவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில்  அப்பகுதியை சேர்ந்த  4 நபர்களை பிடித்து போலீஸர் விசாரணை செய்து வருகின்றனர்.

அனுமந்தன்பட்டி வார்டு 5 , வண்ணார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (80). இவரது மனைவி சிவகாமி (70). சலவைத் தொழிலாளியான  கருப்பையா பல ஆண்டுகளாக கேரளம் மாநிலம், திருச்சூரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களும், திருச்சூரிலே வேலை செய்து வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், கருப்பையா மற்றும் சிவகாமி  இருவரும் வயதுமுதிர்வு காரணமாக மீண்டும் அனுமந்தன்பட்டிக்கு திரும்பி வந்து தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை தம்பதி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கை, கால், வாய் பகுதிகள் துணியால் கட்டப்பட்டு இறந்து கிடந்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் நேரடியாக பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது தனிப்படை அமைத்து குற்றறவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

முதல் கட்ட விசாரணை: தனிப்படை போலீசார் அனுமந்தன்பட்டியை சேர்ந்த 10- க்கும் மேற்பட்டவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.  அதில், இறந்த கருப்பையாவிடம் தங்கம், பணம் அதிகமாக இருப்பதாக அவரது உறவினர் சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், அனுமந்தன்பட்டியை சேர்ந்த 3 பேர் ஆட்டோவில் சென்று வயதான தம்பதியை கொலை செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

இது சம்மந்தமாக சிறுவன் உள்பட 4 பேரிடம் உத்தமபாளையம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.