தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் 32-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையும் படிக்கலாமே.. என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?
நவம்பர் 25-ம் தேதி வரை மொத்தம் 10-நாள்கள் இந்த விசாரணையில் நடைபெறும். விசாரணையின் போது நேரில் ஆஜராகும்படி ஒரு மருத்துவர் உள்பட துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் என மொத்தம் 41-பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.
இதுவரை 31-கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் 1360 பேருக்கு ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 979 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். மேலும் 1,223-ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.