புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருவதை அடுத்து இன்று வியாழக்கிழமை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியிலும் புதன்கிழமை நள்ளிரவு முதல் பரவலாக தொடங்கி மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையம் சார்பில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை(நவ.18) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து, அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளளார்.
இது தொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் சிவகாமி விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.