10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை: அமைச்சர் விளக்கம்

10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எனவும், வினாத்தாள்கள் வடிவமைப்பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாது என்றும் தெரிவித்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை.

தற்போதய நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 8.75 லட்சத்துக்கு மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com