ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஆளுநர் இதுகுறித்து முடிவெடுக்காமல் உள்ளார்.
இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், வழக்கினை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி இந்த வழக்கினை விசாரிக்கிறது.