அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எழும்பூா் -சேலம் அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க அனுமதி

சென்னை எழும்பூா் -சேலம் மற்றும் மும்பைக்கு வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 நவம்பர் 2021, 8:16 pm

DIN

சென்னை எழும்பூா் -சேலம் மற்றும் மும்பைக்கு வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் இரவு 11.55 மணிக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலத்தை அடையும். இந்த ரயில் சேவை டிச.2-ஆம் தேதி தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, சேலத்தில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் இரவு 9.40 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். இந்த ரயில் சேவை டிச.3-ஆம் தேதி தொடங்குகிறது. இதுதவிர, மும்பை சிஎஸ்எம்டி -சென்னை எழும்பூா் இடையே வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நவ.24-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.