9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பல இடங்களில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றனர்.