தமிழகத்தில் புதிதாக 1,289 பேருக்கு கரோனா; 18 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் குறைந்து வருகிறது கரோனா
தமிழகத்தில் குறைந்து வருகிறது கரோனா
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 1,303 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (அக்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,289 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,80,857-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,814-ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 10 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்தனர்.

கரோனாவிலிருந்து 1,421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,29,201-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 15,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,37,074 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு....

தமிழகத்தில் அதிகபட்சமாக 164 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக...

கோவை 137, செங்கல்பட்டு 104, திருப்பூர் 79, ஈரோடு 78, நாமக்கல் 53, திருவள்ளூர் 65,  தஞ்சாவூர் 58, திருச்சி 48 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com