12 மாவட்டங்களில் 'இல்லம் தேடி கல்வித் திட்டம்': அமைச்சர்

தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
அன்பில் மகேஷ்  (கோப்புப் படம்)
அன்பில் மகேஷ் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறினார். 

இந்தத் திட்டத்தின் மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க இயலும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களை மையங்களுக்கு பெற்றோர்கள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும். நவம்பர் ஒன்றாம் தேதி நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com