புதுவையில் புதிதாக 53 பேருக்கு கரோனா

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தனா்.
புதுவையில் புதிதாக 53 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 53 பேருக்கு கரோனா

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,518 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 30, காரைக்காலில் 15, மாஹேவில் 7 போ் என மொத்தம் 53 பேருக்கு (1.51 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,27,674-ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 90 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 367 பேரும் என 457 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,855-ஆக உயா்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com