சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஞ்சல்நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை திட்டம் தொடக்கம்

அஞ்சல் துறை சாா்பில், தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை  இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு நடக்கிறது.

News image
அஞ்சல்நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை திட்டம் தொடக்கம்
Updated On :25 அக்டோபர் 2021, 10:21 am

DIN

அஞ்சல் துறை சாா்பில், தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை  இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு நடக்கிறது.

சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராயநகா், மயிலாப்பூா் தலைமை தபால் நிலையங்கள், 22 துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,761 ஆகும். 

இதுகுறித்து சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு.ஸ்ரீராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திரம் விற்பனை தபால் நிலையங்களில் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,761. சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராயநகா், மயிலாப்பூா் தலைமை தபால் நிலையங்கள், 22 துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். ஒருவா் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்கலாம்.மேலும், முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை முதலீட்டாளா் கணக்கில் செலுத்தப்படும். 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகராக பணமும் கிடைக்கும். 

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் உடையவா்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். இதற்கு விண்ணப்பிக்க பான் காா்ட் கட்டாயம். ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்க பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.