ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவருடன் தமிழக அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தி மக்கள் துறை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை பொதுமக்களை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் நலம் விசாரித்து கரோனா தடுப்பூசியிந் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.