சென்னை புறநகர் ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளில் தளர்வு

சென்னை புறநகர் ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை புறநகர் ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ரயில்வேதுறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு மின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடின்றி பயணிக்காலம். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரிட்டர்ன், சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 

டிக்கெட் வாங்கும்போது 2 டோஸ் தடுப்பூசி சான்று, அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் காலை 7 மணி முதல் 9.30, மாலை 4.30 முதல் 7 மணி வரை பயணிக்க கட்டுப்பாடுகள் தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com