வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 5 நாள்களுக்கு மழை

தென்மேற்குப் பருவ காற்று காரணமாக, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 5 நாள்களுக்கு மழை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 5 நாள்களுக்கு மழை


சென்னை: தென்மேற்குப் பருவ காற்று காரணமாக, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தென்மேற்கு பருவ காற்று காரணமாக, 
செப். 6ல்- மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

செப்.6-ல் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

செப். 8-ல், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

செப். 9, 10-ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com