தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி தில்லியில் இருந்து இன்று சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் ரவியை வரவேற்றனர்.
தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் வரவேற்றனர். தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி பதவியேற்றுக்கொள்கிறார்.
இதையும் படிக்க- பெரியாரின் 143வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.