பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய தலைவர், வலிமையான, வளமையான பாரதத்தை உருவாக்கிய தலைவர், மகளிர், குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் நலம் வாழ திட்டம் தீட்டிய தலைவர், ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் தலைவர், அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர், இன்று வரை 77 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி தந்து உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய தலைவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இதையும் படிக்க- திருவொற்றியூர் துறைமுகம் மூலம் 8,000 வேலை வாய்ப்பு: எல். முருகன்
பிரதமர் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.