தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவமழையினால் நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் மற்றும் மழைநீர் புகும் வாய்ப்பு உள்ளதாலும், அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளதாலும், மழைநீர் கால்வாய்களுடன் கலயது தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார இடர்பாடுகள் ஏற்டாமல் தவிர்த்திடும் பொருட்டு தமிழகம் முழுவதும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம்” அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.