களியக்காவிளை: களியக்காவிளை காவல்துறை சோதனை சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு செல்லும் சரக்கு வாகனங்களில் இருந்து லஞ்சம் வாங்குவதாகவும், வெளிமாவட்டங்களில் இருந்து குமரி வழியாக கேரளத்துக்கு கனிம வளம் கட்டத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. தொடர் புகாரில் கிடைத்த தகவலின் பேரில் நாகர்கோவில் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க | நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இது தொடர்பாக பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் செய்யது ஹுசைன், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் அசோக்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.