சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை: தங்கம் தென்னரசு அதிரடி பதில்

எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை என்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் புது தில்லி பயணம் குறித்து, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

News image
எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை: தங்கம் தென்னரசு அதிரடி பதில்
Updated On :1 ஏப்ரல் 2022, 7:36 am

DIN


புது தில்லி: எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை என்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் புது தில்லி பயணம் குறித்து, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

தமிழகத்தின் நலனை முன்னிறுத்தியே முதல்வர் மு.க. ஸ்டாலின் புது தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும், தில்லியில் முதல்வருக்குக் கிடைத்த வரவேற்பால் பழனிசாமிக்கு பொறாமை என்றும் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே மு.க. ஸ்டாலின் புது தில்லி சென்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தன்னை காப்பாற்றிக் கொள்ள முதல்வருக்கு எந்தத்தேவையும் இல்லை. 

எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்த போது ஒவ்வொரு முறையும் தன்னைக் காப்பற்றிக் கொள்ளத்தான் தில்லி வந்தார். ஒவ்வொரு முறை தில்லி சென்ற போதும், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நலனை அடகுவைத்துள்ளார்.

ஆனால், தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் பாதுகாப்புத் துறை அமைச்சரையும் முதல்வர் ஸ்டாலின் கம்பீரமாகச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, எப்படி நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார் என்பதைத்தான் பார்த்தோமே என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.