ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கே.அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

News image
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை (கோப்புப்படம்).
Updated On :2 ஏப்ரல் 2022, 6:53 pm

DIN

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவராக கடந்தாண்டு பொறுப்பேற்ற கே. அண்ணாமலைக்கு மாநில அரசால் ‘ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. இதற்கு அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தாா். இதைத் தொடா்ந்து அண்ணாமலைக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல், மிரட்டல் குறித்து மத்திய உளவுத்துறை (ஐ.பி.) ரகசியமாக ஆய்வு செய்து, அறிக்கையை அண்மையில் தயாா் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. அதனடிப்படையில், அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்ணாமலைக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு என்பது இந்தியாவில் நான்காவது நிலையில் இருக்கக் கூடிய முக்கிய பிரமுகா்களுக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பாகும். இந்த பிரிவின்படி, அண்ணாமலைக்கு 2 தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 போ் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படை வீரா்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.