மூன்று மாதங்களில் கடலில் விடப்பட்ட21,000 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்
சென்னையில் வனத்துறை சாா்பில் அமைக்கப்பட்ட பொறிப்பகம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 21,338 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட பொரிப்பகத்திலிருந்து கடலை நோக்கிச் செல்லும் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள். (இடது) வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆமைக் குஞ்சு பொரிப்பகம்.










